¶ நட்பு உடைந்து,
முக நூலானது …
¶ சுற்றம் உடைந்து,
வாட்சப் ஆனது …
¶ வாழ்த்துக்கள் உடைந்து,
ஸ்டேட்டஸ் ஆனது …
¶ உணர்வுகள் உடைந்து,
ஸ்மைலியாய் ஆனது …
¶ குளக்கரை உடைந்து,
குளியலறை ஆனது …
¶ நெற்களம் உடைந்து,
கட்டிடமானது …
¶ கால நிலை உடைந்து,
வெப்பமயமானது …
¶ வளநிலம் உடைந்து,
தரிசாய் ஆனது …
¶ துணிப்பை உடைந்து,
நெகிழியானது …
¶ அங்காடி உடைந்து,
அமேசான் ஆனது …
¶ விளை நிலம் உடைந்து,
மனை நிலம் ஆனது …
¶ ஒத்தையடி பாதை உடைந்து,
எட்டு வழியானது …
¶ கடிதம் உடைந்து,
இ -மெயிலானது …
¶ விளையாட்டு உடைந்து,
வீடியோ கேம் ஆனது …
¶ புத்தகம் உடைந்து,
இ-புக் ஆனது …
¶ சோறு உடைந்து
‘ஓட்ஸ்’ சாய்ப் போனது…
¶ இட்லி உடைந்து,
பர்கர் ஆனது …
¶ தோசை உடைந்து,
பீட்சாவானது …
¶ குடிநீர் உடைந்து,
குப்பியில் ஆனது …
¶ பசும் பால் உடைந்து,
பாக்கெட் பால் ஆனது …
¶ வெற்றிலை உடைந்து,
பீடாவானது …
¶ தொலைபேசி உடைந்து,
கைப்பேசியானது …
¶ வங்கி உடைந்து,
பே டி எம் ஆனது …
¶ நூலகம் உடைந்து,
கூகுளாய் போனது …
¶ புகைப்படம் உடைந்து,
செல்ஃபியாய் ஆனது …
¶ மனிதம் உடைந்து,
மத வெறியானது …
¶ நல்ல அரசியல் உடைந்து,
அருவெறுப்பானது …
¶ பொது நலம் உடைந்து,
சுயநலமானது …
¶ பொறுமை உடைந்து,
அவசரமானது …
¶ ஊடல் உடைந்து,
விவாகரத்தானது …
“*நிரந்தரம் உடைவது நிதர்சனம்…* ஆகையால்,
உடைவது உலகினில்
நிரந்தரமானது” ..!
எல்லாவற்றையும் இழந்து புலம்பிக் கொண்டு இருக்கின்றான்,
இன்றைய கால மனிதன்….
தொலைந்து போன காலம் மீண்டு வருமா…















