இந்திய துணை கண்டத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 133 ஆவது பிறந்தநாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு ஐஎன்டியூசி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது தமிழ்நாடு ஐஎன்டியுசி அறக்கட்டளையின் தலைவர் திரு வி சி முனுசாமி அவர்கள் கலந்து கொண்டு ஜவஹர்லால் நேருவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து வணங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஐஎன்டியூசி மூத்த தலைவர் திரு ஏ கல்யாணராமன் அவர்களும், சென்னை மாவட்ட ஐஎன்டியுசி தலைவர் எம் கீர்த்தி அவர்களும், வடசென்னை மாவட்ட ஐஎன்டியூசி தலைவர் திரு விஜிபி கணேசன் அவர்களும், சென்னை மாவட்ட இளைஞர் பிரிவு தலைவர் திரு கே மோகன் ராஜ் MBA, அவர்களும் தமிழ்நாடு ஐஎன்டியூசி கட்டுமான தொழிலாளர் தலைவர் திரு ஜி தயாளன் அவர்களும் ஐஎன்டியூசி காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் தோழர்களும் கலந்துகொண்டு பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை சிறப்பாக நடத்தினர்.













