மத்திய,மாநில அரசுகள் கிழக்கு கடற்கரையில் விசைப்படகுகள் பயன்படுத்தி பிடிக்க தடை விதித்துள்ளது. இந்த 61 நாட்களுக்கும் ஒரு குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு 131.15 காசுகள் வழங்குவதை, நாள் ஒன்றுக்கு 500ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், இந்த 61 நாட்களுக்கும் சுமார் 30,000/ ரூபாயாக வழங்க வேண்டும், இந்த 61 நாட்களும் விசைப்படகுகளை பராமரிப்பதற்காக விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5லட்ச ரூபாய் உதவித்தொகையாக வழங்க வேண்டும், நாட்டுப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லும்போது கடலோர காவல்படை, கோர்ஸ் கார்ட் போன்றவை மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், வெளிநாட்டு கப்பல்கள் இந்திய கடலில் மீன்பிடிப்பதை முற்றும் முழுவதுமாக தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், தடைகால நிவாரணத்தை மீன்பிடி தடை காலத்திலேயே வழங்க வேண்டும் என்று அனைத்து மீனவர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Home சென்னைத் துறைமுகம் மீன்பிடி தடை காலத்திலேயே வழங்க வேண்டும் என்று அனைத்து மீனவர் சங்கம் சார்பில் கோரிக்கை :
















