



பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம்-1ல் – 36ஆண்டு காலமாக மின்சாரத்துறையில் சிறப்பாக பணியாற்றி வந்த நமது பாசத்திற்குறிய சகோதரர் நன்பர் திரு.மகேந்திரன் அவர்கள் இன்று 29-11-2024 பணி நிறைவு பெறுகிறார்_
இன்று மண்டலம்-1ல் நடைப்பெற்ற பணி நிறைவு நிகழ்ச்சியில் நமது மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர், தி.மு.தனியரசு கலந்து கொண்டு அவரை பாராட்டி சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்_இந்த நிகழ்ச்சியில் மண்டல அலுவலர் புருஷோத்தமன், செயற்பொறியாளர் சகுபர் உசேன்,பாபு மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் அனைத்து மண்டல பணியாளர்கள் மற்றும் தி.மு.க. சென்னை வடகிழக்கு மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன், கிழக்கு பகுதி துணை செயலாளர் எம்.வீ.குமார், மாவட்ட பிரதிநிதி முருகா எஸ். ஆறுமுகம், 9வது வட்ட அவைத்தலைவர் கண்ணையன் மற்றும் கழக தோழர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மகேந்திரன் அவர்களின் குடும்பத்தினரையும் மகேந்திரன் அவர்களை பாராட்டி வாழ்த்தினார்கள்.
















