சென்னை ஆர் கே நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டு கொடி அசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பான்
போக்குவரத்து துறைக்கு 2 ஆயிரத்து 200 பேருந்துகள் வாங்கப்படும் அதில் 100மின்சார பேருந்துகள் வாங்கப்படும்
மின்சார பேருந்துகளை முதலில் நகரங்களில் இயக்கி பார்த்த பின்பு தான் கிராமங்களில் இயக்க முடியும்
டீசல் விலை அதிகரித்து வருவதால் அதிகாரிகளுடன் ஆலோசித்து மின்சார பேருந்து வாங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்
தமிழ்நாட்டின் நிதி நிலைமையை வெளிப்படையாக நிதியமைச்சர் சொல்லியிருக்கிறார் இதனால் எதிர்க்கட்சிகள் ஏதாவது குறை சொல்லத்தான் செய்வார்கள் என்று கூறினார்
















