புதுவையில் கடந்த 5 மாதங்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்து இருந்தது. சராசரியாக ஒரு நாளைக்கு 20-க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக புதுவையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மார்ச் 22 முதல் மே 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்














