திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 மற்றும் 54 ஆகிய வார்டுகளில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.13.31 கோடி மதிப்பீட்டில் கருப்பகவுண்டம் பாளையம் பிரதான சாலை, மற்றும் கல்லாங்காடு, ஆகிய பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. கரைப்புதூர் A.நடராஜன் MLA அவர்கள் பணிகளை துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் மாநகராட்சி உதவி ஆணையாளர் கண்ணன், உதவி பொறியாளர் கார்த்திக், திருநாவுக்கரசு, வட்டக் கழக செயலாளர்கள் ராஜேந்திரன், தர்மலிங்கம், நாகஜோதி, சிவக்குமார், கதிர், சுரேந்திரன், மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பட்டு கலந்து கொண்டனர்














