ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் போக்குவரத்து சார்பில் மீஞ்சூரில் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி செங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் சோபிதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் தலைக்கவசம், போதை உள்ளிட்ட விழிப்புணர்வு மீஞ்சூர் பகுதியில் உள்ள ஐந்து தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்














