மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை மேற்கு ஒன்றியம் செல்லப்பம்பாளையம் ஊராட்சி சின்னபுதூரில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை மற்றும் உடுக்கம்பாளையம் ஊராட்சியில் ஒன்றிய பொது நிதியில் இருந்து 5 லட்சம் மதிப்பில் காங்கிரீட் தளம் அமைக்கவும் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன் துணைத்தலைவர் சண்முகவடிவேல் ஒன்றிய கழகச் செயலாளர் புவியரசு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கவிதாமணி புவனேஸ்வரி, மற்றும் மொடக்குப்பட்டி பாபு, தங்கவேல், வெற்றிவேல், பழனிச்சாமி ஆசிரியர் ஊராட்சி மன்ற தலைவர் செழியன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.















