சென்னை திருவொற்றியூரில் தனியார் நிறுவனத்தின் மூலமாக திருவொற்றியூர் மாநகராட்சிகளில் இருந்து துப்புரவு பணியாளர்கள் மூலம் கொண்டுவரக்கூடிய குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து மக்கும் குப்பைகளை உரத்திற்காக பயன்படுத்துவதற்காக பிரித்தெடுக்கப்படுகிறது மக்காத குப்பையில் மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதற்காக தனித்தனியாக பிரித்து எடுக்கப்பட்டு வருகிறது இதில் திருநங்கைகள் 10 பேருக்கு துப்புரவுத் தொழிலாளர்கள் பணியையும் காஞ்சனா என்ற திருநங்கைக்கு மேற்பார்வையாளர் பணியையும் வழங்கியுள்ளனர்
திருவொற்றியூரில் திருநங்கைகளுக்காக இதுபோன்ற பணியை வழங்கியதில் திருநங்கைகள் பெருமிதம் அடைந்துள்ளதாகவும் மேலும் இங்கு வரக்கூடிய குப்பைகளில் பிளாஸ்டிக் துணி நைலான் டயர் பஞ்சு போன்ற மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்தெடுத்து நிறுவனத்தின் மூலம் மறுசுழற்சி முறைக்கு அனுப்பி வைக்கின்றனர் அதேபோன்று மக்கும் குப்பைகளை உரம் தயாரிப்பதற்காக பிரித்தெடுத்து அனுப்புகின்றனர் இதிலிருந்து வரக்கூடிய லாபத்தை நிறுவனம் துப்பரவு தொழிலாளர்களுக்கு வழங்குவதாகவும் மேற்பார்வையாளர் திருநங்கை காஞ்சனா தெரிவித்தார்
















