சென்னை, ஆர்கே.நகர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை, ஆர்கே. நகர் கண்ணகி நகர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதால் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேட்டி: விஜயகுமார்.















