தமிழக முதல்வர் அவர்கள் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள லூர்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவிகளுக்கு மடிக்கணினி மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு எம்,எல், ஏ., வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, வணக்கத்துக்குரிய சென்னை மாநகராட்சி மேயர் திருமதி. பிரியா, துணை மேயர் திரு. மகேஷ் குமார், கொளத்தூர் கிழக்குப் பகுதிக் கழகச் செயலாளர் ஐ.சி.எப். வ.முரளிதரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ப.ரங்கநாதன், கழக சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன், தலைமை கழக வழக்கறிஞர் கே.சந்துரு ,சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ககன் தீப்சிங் பேடி இ.ஆ.ப., மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
















