விவசாயி கொலை: மனைவி உள்பட 5 பேர் கைது;

0
282

பாலக்கோடு அருகே உள்ள சக்கிலிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 46). விவசாயி. இவர் கடந்த 7-ந்தேதி ஈச்சம்பள்ளம் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் கொலை செய்யப்பட்டார். பின்னர் அருகில் உள்ள காட்டில் உடலை எடுத்து சென்று எரித்து புதைத்து உள்ளனர். இந்த கொலை தொடர்பாக மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் அய்யப்பன் கொலை தொடர்பாக அவரது மனைவி முனியம்மாள் (40), மாமனார் புட்டப்பன் (75), மனைவியின் சகோதரர்கள் தங்கவேல் (47), மாதையன் (45), சின்னசாமி (35) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். வேலு என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here