நாளை முதல் டாஸ்மாக் பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி;

0
276

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே திறக்கப்பட்டுவிட்டது. ஆனால், டாஸ்மார்க் கடைகளில் உள்ள பார்களை திறக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், பல மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களை நாளை முதல் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. பார்கள் திறக்க அனுமதிக்கப்பட்டபோது 50 சதவிகித இருக்கை வசதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலேயே 50 சதவிகித இருக்கை வசதியை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்களுக்கு வருவோருக்கு வெப்ப பரிசோதனை கட்டாயம் நடத்த வேண்டும். பார்களின் நுழைவாயிலில் சானிடைசர்களை வைக்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே பார்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here