தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூ 250 ரூபாய் கட்டணம் ;

0
406

சுகாதாரப் பணியாளர்களில் 77 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் மருந்து செலுத்தப்பட்டிருப்பதாகவும், 70 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் மருந்து செலுத்தப்பட்டிருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார். மேலும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, ஒரு நிதி உச்சவரம்புக்கு உட்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறினார். அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி முற்றிலும் இலவசம், அதற்கான செலவை மத்திய அரசு ஏற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி மையங்களாக செயல்படும் தனியார் மருத்துவமனைகள், ஒரு டோஸ் தடுப்பூசி மருந்துக்கு ஒரு நபருக்கு 250 ரூபாய் ,சேவை கட்டணம் 100 ரூபாய் உள்பட கட்டணம் வசூலிக்கலாம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுமார் 10,000 தனியார் மருத்துவமனைகள், மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மாநில அரசின் கீழ் உள்ள பிற தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி போடும் மையங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here