வேலூர் மாவட்டம்,
குடியாத்தம் டவுன் பிச்சனூர் ஆர்.எஸ்.நகர், முனிசிபல் லைன், ஆசிரியர்காலனி ராமலிங்கம் நகர், அசோக் நகர் ஆகிய பகுதியில் வசித்து வந்த பட்டியல் இன ஏழை எளிய மக்கள் வீட்டுமனை வழங்கக்கோரி குடியாத்தம் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தகுதியான நபர்கள் 232 பேருக்கு குடியாத்தம் தாலுகா கொண்ட சமுத்திரம் ஊராட்சி காந்திநகர் கல்லேரி பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வீட்டுமனை பட்டா பெற்ற பெரும்பாலோனோர் ஏழைக் கூலித் தொழிலாளிகள் அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பகுதியில் குடிசைகள் அமைக்கலாம் என சில தினங்களுக்கு முன்பு அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்குச் சென்று பார்த்தபோது சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு இருந்துள்ளதாகவும் நில உரிமையாளர் இங்கே ஏதும் வீட்டுமனை பட்டா வழங்க வில்லை என கூறியுள்ளதாக கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டுமனை பெற்ற 232 பட்டியல் இன ஏழை எளிய தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நான்காண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை அளந்து பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அந்த இடத்தை வேறு நபர் உரிமை கொண்டாடுவதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வருவாய்த் துறையினரிடம் பயனாளிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஆதரவாக இந்திய குடியரசுக் கட்சியினர் களத்தில் இறங்கினார்கள்.
காலையில் நேற்று காலையில் குடியாத்தம் தாலுகா அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா அளந்து கல் நட்டு தராததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்துவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய குடியரசு கட்சியின் வேலூர் மாவட்ட இணை செயலாளர் சாமுபுஷ்பராஜ் தலைமை தாங்கினார்.மாவட்ட மாணவரணி செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசு கட்சி வேலூர் மாவட்ட தலைவர் தலித்குமார் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இந்த போராட்டத்தில் குடியரசு கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தென்காந்தி, மாவட்ட துணைத்தலைவர் வீரேந்தர்,மாவட்ட இளைஞரணி செயலாளர் சோமு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பயனாளிகள் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலை புறக்கணிப்பு செய்வதாகசெய்வதாகவும் தெரிவித்தனர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி,தாசில்தார்கள் லலிதா,கலைவாணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஓரிரு தினங்களில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அளந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர் இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.











