வடசென்னையை கலக்கிய ஒரு நம்பர் லாட்டரி விற்பனையாளர் கைது;

0
293

வடசென்னை முழுவதும் மூன்று விதமாக மூன்று மாநிலங்களை சேர்ந்த லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மொத்த வியாபாரியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்

வட சென்னை குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் ஒரு நம்பர் லாட்டரி வழங்குவதாக வடக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலையடுத்து உதவி ஆய்வாளர் விஜய் தலைமை காவலர் முருகேசன் காவலர்கள் விமல் மற்றும் அருண்குமார் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்தார் ஜேவிஎம் என்ற ஒரு எழுத்தை மட்டும் குறிப்பிட்டு தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் கடைசியாக பத்து வருடத்திற்கு முன்பு ஜே வி எம் லாட்டரி என்ற பெயரில் ஒருவர் கடை நடத்தி வந்தது தெரியவந்தது இதனையடுத்து அவரின் செல்போன் எண்ணை வைத்து சோதனை மேற்கொண்டதில் தண்டையார்பேட்டை பகுதியில் இருப்பதாக தனிப்படை போலீசார் கண்டறிந்து இரண்டு நாட்கள் தண்டையார்பேட்டை முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டு கும்மாளம்மன் கோவில் பகுதியில் இருந்த ஜேபிஎம் என்கிற செல்வமணி என்பவரை கைது செய்தனர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் முதலில் மறுத்து வந்த அவர் நிலையில் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டதில் செல்வமணி லாட்டரி விற்பனை செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளார் விசாரணையில் 3 மாநிலத்தை சேர்ந்த லாட்டரிகள் கேரளா பம்பர் லாட்டரி சுமார் ஒரு கோடி முதல் 3 கோடி வரை லாட்டரி பணம் கிடைக்கும் என்று அங்கு இருக்கும் இவரின் சகோதரரை வைத்து லாட்டரி வாங்கிய அந்த நம்பரை வைத்து விற்பனை செய்து வந்துள்ளார் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் லாட்டரி 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை கிடைக்கும் அளவிலான லாட்டரி நம்பர் மற்றும் வைத்து இவர் பொறுப்பேற்று விற்பனை செய்து வந்துள்ளார் கர்நாடக மாநிலம் பெங்களூரில் தன் இரண்டாவது மகள் வைத்து பூட்டான் லாட்டரி என்ற பெயரில் அங்கு விற்கப்படும் லாட்டரி நம்பரை வைத்து வட சென்னையில் விற்பனை மேற்கொண்டு வந்துள்ளார் லாட்டரியில் கிடைக்கும் பணத்தை சிட்பண்ட் மற்றும் நகை பெண் உள்ளிட்ட இடங்களில் முதலீடு செய்து கையில் பணம் வைத்துக் கொள்ளாமல் ஒன்றும் இல்லாதது போல் சகஜமாக மற்ற மனிதர்களைப் போல அனைவரும் பயணித்து குறித்து வைத்திருந்த நம்பர்களை மட்டும் இவரின் கீழ் பணிபுரியும் 30 பேரிடம் கொடுத்து விற்பனை செய்து இதன் மூலம் லாபம் பார்த்து வந்துள்ளார் செல்வமணி அவரிடமிருந்த பத்துக்கும் மேற்பட்ட நோட்டுப் புத்தகங்களையும் குறியீட்டு எண்களையும் பரிமுதல் பயிர் செய்த தனிப்படை போலீசார் அவரை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு மேற்கொண்டு அவரை புழல் சிறையில் அடைத்தனர் தகவல் கிடைத்த 12 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து அவரிடம் இருந்த லாரிகளை பறிமுதல் செய்து தனிப்படை போலீசாருக்கு வடக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here