யார் உண்மையில் சிவனடியார்:

0
190

*1)பன்றிக்கறியை படைத்து, தன் அன்பை வெளிக்காட்டிய ஒருவர்தான் நாயன்மார் ஆனார்.*

*2)பிடித்த மீன்களில் உயர்ந்த மீனை சிவனுக்கு தந்தே ஒருவர் நாயனார் ஆனார். (மீனவர் குளத்தில் பிறந்தவர் மீன் சாப்பிடாமலா இருந்திருப்பார்!!!!!)*

*3)மாட்டின் தோலை உறித்து வாத்திய கருவிகளை கோயிலுக்கு இனாமாக வழங்கியே, நந்தனார் நாயன்மார் ஆனார்.*

*4)சிவனடியார்களின் உடைகளை துவைத்து கொடுத்தே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*

*5)சிவனடியார்களுக்கு அமுது படைத்தே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*

*6)சிவனடியார்களுக்கு ஆடைகள் தந்துதவியே, ஒருவர் சிவனடி சேர்ந்தார்.*

*7)சிவபெருமான் புகழை பாடியே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*

*8)குங்கிலிய தூபம் போட்டே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*

*9)ஈசனை தவறாக பேசுபவர் நாவை வெட்டியே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*

*10)ஈசனுக்கு பூ பரித்து போட்டே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*

*ஆக…… சிவனடியார் என்பர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் நிபந்தனையும் கிடையாது.*

*ஈசனை நினைத்து எந்த செயல் செய்தாலும், அது சிவதொண்டே.*
*அன்பர்கள் எப்படி இருந்தாலும், ஈசன்மேல் அன்பாக இருந்தால் அவரே சிவனடியார்.*
*எதைவேண்டுமானாலும் செய்யுங்கள்…. ஈசனை நினைந்து செய்யுங்கள்.*
*சிவபெருமானை நினைந்து செய்யும் எல்லா செயலும் சிவனுக்கு ரொம்ப பிடிக்கும்.*
*சிவனடியார் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்* *என்று நால்வர் பெருமக்களோ* *நாயன்மார்களோ சொல்லவே இல்லை.*
*ஆக…..*

*சிவனடியார் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும்* *என்று சொல்லும் தகுதி, நம்மில் யாருக்குமே கிடையாது.*
*சிவத்தை நினைந்து செய்யும் ஒவ்வொரு செயலும் வழிபாடுதான்.*

*வாழ்வையே வழிபாடாக்கிய ஒவ்வொருவரும் சிவனடியார்தான்.*
*வாழ்தலே வழிபாடு.*

*நமச்சிவாய*
*சொல்லுக சொல்லைப்* *பிறிதோர்ச்சொல் அச்சொல்லை*
*வெல்லும் சொல்இன்மை யறிந்து.*

*திருசிற்றம்பலம்?*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here