இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற “தந்தை பெரியார் நினைவுச் சொற்பொழிவு ” நிகழ்ச்சியில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நினைவு பரிசு வழங்கி சிறப்புரையாற்றிய நிகழ்வில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்ரமணியன் ஆகியோருடன் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி அவர்கள் பங்கேற்றனர். .
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், பெருநகர மாநகராட்சி மேயர், மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.