வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1973ஆம் ஆண்டில் படித்த மாணவர்களின் பொன்விழா சங்கமம் நிகழ்ச்சி 23.4.2023அன்று பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா புக் ஆப் ரிக்கார்ட் சாதனை விருது பெற்ற பள்ளியின் முன்னாள் மாணவரும் சமூக ஆர்வலருமான பாரத் தி.நந்தகுமாரை வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டினார். அப்போது முன்னாள் எம்எல்ஏ செ.கு.தமிழரசன், தலைமை ஆசிரியர் (ஓய்வு) டி.எஸ்.விநாயகம், புலவர் வே.பதுமனார், தலைமை ஆசிரியர் எஸ்.டி.திருநாவுக்கரசு மற்றும் பலர் உடனிருந்தனர்.
குடியாத்தம் சந்தப்பேட்டை நேதாஜி சவுக் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாரத் தி.நந்தகுமார் அவர்கள் சமூக வலைதளங்களில் தினம்தோறும் மேற்கொள்ளும் கல்வி, வேலைவாய்ப்பு தகவல்களுக்காக, இந்தியா புக் ஆஃப் ரிக்கார்டின் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
2015ஆம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் (பேஸ் புக், டிவிட்டர், வாட்ஸ் ஆப்) கல்வி,வேலைவாய்ப்புத் தகவல்களை நாள்தோறும் பதிவு செய்து, பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உதவியமைக்காகவும், மாணவர்களின் உயர்கல்வி வளர்ச்சியில் பங்களிப்பை ஆற்றியமைக்காகவும் சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
குடியாத்தம் நிருபர் சுவேதா S.கார்த்திகேயன்